Niroshini / 2021 ஜனவரி 14 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவின் இருவேறு பகுதிகளில் இருந்து, நேற்று முன்தினம் (13), வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு - அளம்பில், சாலை ஆகிய பகுதிகளில் இருந்தே, வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
அளம்பில் பகுதியில், வெடிமருந்து நிரப்பப்பட்ட குழாய், 81 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள் - 2, ஆர்.பி.ஜி குண்டுகளின் சார்ஜர்கள் - 4, வோக்கி டோக்கி - 1, 81 மில்லிமீற்றர் மோட்டார் குண்டு ஒன்றின் பின்பக்கங்கள் - 2, 40 மில்லிமீற்றர் எம்.பி.எம்.ஜி குண்டுகள் - மூன்று என்பன மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை, சாலை பகுதியில், ஆர்.பி.ஜி குண்டுகள் - 2 , கைக்குண்டுகள் - 2, மிதிவெடி - 1, ஆர்.பி.ஜி குண்டுகளின் பாகம் - 1, டெட்டனேட்டரின் பகுதி - 1 என்பன மீட்கப்பட்டுள்ளன.
இரு பகுதிகளிலும் இருந்து மீட்கப்பட்ட பெடிபொருள்கள் முல்லைத்தீவு பொலழஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற உத்தரவுக்கமைய, அவற்றைத் தகர்த்து அழிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025