Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Administrator / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன், சண்முகம் தவசீலன்
யாழ்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர், மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவமொன்று வியாழக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.
25 வயதான துரைசிங்கம் உதயநிலவன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார். இவர், கிளிநொச்சியில் அமைந்துள்ள லீசிங் கம்பனி ஒன்றில் பணியாற்றியவர் என்றும் மல்லாவி பிரதேச வாடிக்கையாளர் ஒருவரிடம் பணம் வசூழிக்கச் சென்றிருந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மரணத்திற்கான் காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. அவர் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று சில தகவல்களும் அவர் அருந்தியிருந்த குளிர்பானத்தில் நஞ்சு கலக்கப்பட்டிருந்ததாக மற்றும் சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார், விசாரணைகளை நடத்தி வருகின்றனர். சடலம் தற்போது, கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது என பொலிஸார் மேலும் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
6 hours ago