2025 ஜூன் 30, திங்கட்கிழமை

விசேட ஒன்றுகூடல்

Kogilavani   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சன்முகம் தவசீலன்

வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி, வர்த்தக வாணிபம், வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சின் 2014 ஆம் 2015 ஆம் ஆண்டுகளுக்கான நடைபெற்று முடிந்த வேலைத்திட்டங்கள் தொடர்பிலான திட்ட மீளாய்வும், எதிர்வரும் 2016 ஆண்டுக்கான திட்டமிடல் தொடர்பான, வடக்கு மாகாண சபையின் சகல உறுப்பினர்களுக்குமான விசேட ஒன்றுகூடலும் நேற்று வியாழக்கிழமை, குருநகர் கடற்கரை வீதி, வீதி அபிவிருத்தி திணைக்கள மாகாண பணிப்பாளர் பணிமனையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

வடக்கு, மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இவ் ஒன்றுகூடலில்,   பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, அமைச்சர் பா.டெனிஸ்வரன்,  புதிய திட்டமாக எதிர்வரும் 2016 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் தனது வீதி அபிவிருத்தி திணைக்களத்தினூடாக வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் உட்பட 38 உறுப்பினர்களுக்கும் ஒவ்வொருவருக்கும் தலா 5 மில்லியன் வீதம் ஒதுக்கித்தர திட்டமிட்டுள்ளதாகவும் இதனூடாக சகல உறுப்பினர்களும் தமது பகுதிக்கு தேவையான, வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு உட்பட்ட வீதிகளை சீர்செய்துகொள்ளமுடியும் என்றும் தெரிவித்தார்.

நிதி ஒதுக்கீட்டின் பிரகாரம், தெரிவுசெய்து கொடுக்கப்படும் வீதிகள் அனைத்தும் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினூடாக அபிவிருத்தி செய்துதரப்படும் என்றும், எனவே ஒருமாத கால எல்லைக்குள் தங்களது தெரிவை வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு தெரியப்படுத்துவதன் மூலம் வெகு விரைவாக அடுத்த ஆண்டில் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தனது விசேட 5 மில்லியன் திட்டத்தின் மூலம் சகல மாகாண சபை உறுப்பினர்களுக்கும் தமது மாவட்ட மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமாக உள்ள வீதிகளை சீர்செய்துகொள்ள உதவியாக இருக்கும் என்றும் கூறனார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X