2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

விசேட தேவையுடையவர்களின் கல்வி மேம்பட்டுக்கு உதவ வேண்டும்

Niroshini   / 2016 மார்ச் 02 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் விசேட தேவையுடைய மாணவர்களின் கல்வியை மேம்படுத்த உதவவேண்டும் என கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் அ.முருகவேல் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் விசேட தேவையுடைய 444 மாணவர்கள் உள்ளபோதும் அவர்களுக்கான போதிய வசதிகள் இல்லாத நிலை காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக வலயக்கல்விப் பணிப்பாளரைத் தொடர்புகொண்டு கேட்டபொழுது,

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 104 பாடசாலைகளில் 32,245 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இவர்களில் 444 மாணவர்கள் விசேட தேவையுடைய மாணவர்களாக உள்ளனர். இந்த மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு 17 கல்வி அலகுகள் உள்ளன. 156 மாணவர்கள் மாத்திரமே இந்த அலகுகளில் கல்வி கற்று வருகின்றனர்.

ஏனைய 288 விசேட தேவையுடைய மாணவர்களும் சாதாரண வகுப்புக்களில் கல்வி கற்று வருகின்றனர். இது பெரும் சவாலாக இருக்கின்றது.

விசேட தேவையுடைய மாணவர்களைப் பொறுத்தவரையில், 5 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று இருக்க வேண்டும். ஆனால், எமது வலயத்தை பொறுத்தவரையில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என உள்ளது.

கடந்த யுத்தம் காரணமாக இந்த மாணவர்களில் நடத்தைகள் நேரத்துக்கு நேரம் மாற்றமடைகின்றன. இவர்களை வழிப்படுத்த 7 வழிகாட்டி ஆலோசனை நிலையங்கள் உள்ளன.

அங்கு ஏழு ஆசிரியர்கள் உள்ளனர். மேலதிக ஆசிரியர்களை உள்வாங்கி இவ்வாறான மாணவர்களை மேம்படுத்த வேண்டியுள்ளது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X