2025 ஜூலை 10, வியாழக்கிழமை

வீதியினை புனரமைக்குமாறு கோரிக்கை

Menaka Mookandi   / 2017 ஜனவரி 16 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி பளை நகரத்தில் இருந்து புலோப்பளை, அல்லிப்பளை, கிளாலி வரையான வீதியினை புனரமைக்குமாறு, குறித்த பகுதியிலுள்ள மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பளைப் பகுதியில் மீள்குடியேற்றம் நடைபெற்ற காலங்களில், குறித்த வீதியில், போக்குவரத்து செய்ய முடியாதளவுக்கு இராணுவத்தினர் தடை விதித்திருந்த நிலையில், பின்பு அத்தடை நீக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த எட்டு கிலோமீற்றர் வரையான வீதி புனரமைக்கப்படாத நிலையில் போக்குவரத்தில் ஈடுபடுவதில் மக்கள் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர்.

குறிப்பாக கிளாலிப் பகுதியில் பிடிக்கப்படும் கடலுணவுகள் பளை நரகத்திற்கு இலகுவாக கொண்டு வரமுடியும். தற்போது நீண்ட தூரம் சுற்றியே கடலுணவினை பளை நகரத்திற்குக் கொண்டு வர முடிவதாகவும் எனவே குறித்த வீதியினைப் புனரமைத்துத் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .