2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வெப்பத்தால் கற்றல் செயற்பாடுகள் பாதிப்பு

George   / 2016 மே 02 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடரும் வெப்பத்துடன் கூடிய வரட்சி காலநிலை காரணமாக தகரக் கொட்டகைகளின் கீழ் கல்விபயிலும் மாணவர்கள் பெரும் இடர்களை எதிர்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி கல்வி வலயத்தில் தற்போது 104 பாடசாலைகள் இயங்குகின்றன. இப்பாடசாலைகளில் 32,245 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். 1,727 ஆசிரியர்கள் கற்பித்தலில் ஈடுபட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றத்தின் பின்னர் பல பாடசாலைகளில் தகரக் கொட்டகைகளாக அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள வெப்பமான சூழல் மாணவர்களையும் ஆசிரியர்களையும் பாதித்துள்ளன. 

வினாசியோடை, வேரவில், முக்கொம்பன், கறுக்காய்த்தீவு, செம்மங்குன்று, ஆனையிறவு, பரந்தன், முருகானந்தா கல்லூரி, புன்னைநீராவி உட்பட பல பாடசாலைகளில் மாணவர்கள் தகரக் கொட்டகை வகுப்புக்களிலேயே கல்வி கற்று வருகின்றனர். எனவே, தற்போது காலை 10.00 மணிக்குப் பின்னர் கல்விபயில முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த பாடசாலைககளுக்கு நிரந்தரக் கட்டடங்கள் இல்லாத நிலையில் தற்காலிக ஏற்பாடாக அமைக்கப்பட்ட தகரக் கொட்டகைகளிலும் தற்போது கல்வி செயற்பாடுகளை மேற்கொள்வதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X