2025 ஜூன் 30, திங்கட்கிழமை

விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி

Thipaan   / 2015 டிசெம்பர் 26 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன், சண்முகம்; தவசீலன்

கிளிநொச்சி ஏ-35 வீதியின் பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில், இளம் குடும்பஸ்தரான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்;துள்ளார்.

கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபையின் உத்தியோகத்தரான  கோரக்கன்கட்டு முரசுமோட்டையைச் சேர்ந்த இந்திரராஜா சுதர்சன் (வயது 34) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்;துள்ளார்.

சனிக்கிழமை மாலை (25) முரசுமோட்டையிலிருந்து பரந்தன் சந்திக்கு மோட்டார் சைக்கிளில் சென்;று கொண்டிருந்த குறித்த குடும்பஸ்தரை, எதிரே வெளிச்சம் இன்றி வந்த உழவு இயந்திரம் மோதி விட்டு தப்பிச்சென்றுள்ளது.

விபத்தில் படுகாயம் அடைந்த குறித்;த நபர், கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் கிளிநொச்சிப் பொலிஸார் விபத்துடன் தொடர்புடைய உழவு இயந்திரத்தை கைது செய்வதற்கான நடவடிக்களை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X