2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

வேலைத்திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிப்பு

Kogilavani   / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட், மார்க் ஆனந்த்

மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் மாநாடு இன்று வியாழக்கிழமை(8) மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அலுவலகத்தில் இடம்பெற்றது.

மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ரி.பூலோகராசா தலைமையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கணக்கு பதிவாளர் ஐ.சி.ஏ.ஜோண் பொஸ்கோ, மன்னார், நானாட்டான், முசலி, மடு, மாந்தை மேற்கு ஆகிய பிரதேச இளைஞர் சேவை அதிகாரிகள் மற்றும் மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மாவட்டத்தில் உள்ள 5 பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் முன்னெடுத்த மற்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .