2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

Sudharshini   / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் புனர்வாழ்வு பெற்ற போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு, கிளிநொச்சி பரந்தன் சனசமூக நிலைய மண்டபத்தில் சனிக்கிழமை (12) இடம்பெற்றது.

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரனின் திட்டத்தின் கீழ், வடக்கு கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் வாழ்வாதார செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வாகும்.

திணைக்களத்தால் தெரிவுசெய்யப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 147 புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.

பதிவுகளை மேற்கொள்ளாது உள்ள புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் அடுத்த வருடம் ஜனவரி மாத இறுதிக்குள் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் இதன்போது தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X