Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Kogilavani / 2016 நவம்பர் 25 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
மீளக்குடியமர்ந்த வளலாய் பகுதி மீனவர்;கள் 36 பேருக்கு, வாழ்வாதர உதவிகள், புதன்கிழமை (23) வழங்கி வைக்கப்பட்டதாக கடற்றொழில் நீரியல்வளத்துறை மாவட்ட உதவிபணிப்பாளர் ஜெயராஜாசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.
மீளக்குடியமர்ந்து இதுவரை வாழ்வாதர உதவிகளை பெறாத மீனவர்;கள் 36 பேருக்கு 2.04 மில்லியன் ரூபாய் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
16 பேருக்கு 50,000 ரூபாய் பெறுமதியான வலைகள், 9 பேருக்கு 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகளும், 11 மீனவர்களுக்கு 40,000 ரூபாய் பெறுமதியான வலைகளும் வழங்கி வைக்கப்பட்டது.
யூ.என்.டி.பி நிறுவனத்தின் அனுசரணையுடன் இவ் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago