2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

விவசாய உள்ளீடுகள் வழங்கிவைப்பு

George   / 2015 ஒக்டோபர் 09 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட விவசாய உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு, இன்று(9) வெள்ளிக்கிழமை காலை மன்னார் உயிலங்குளம் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் பிரதி மாகாண விவசாய பணிப்பாளரின் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக, வடமாகாண விவசாய அமைச்சர் பா.ஐங்கரநேசன் மற்றும் கௌரவ விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஞா.குணசீலன், சட்டத்தரணி பிரிமூஸ் சிறாய்வா மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு விவசாயம் மற்றும் தோட்டச் செய்கைகளை மேற்கொள்ள தேவையான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

குறிப்பாக விதை நெல், உரம், பழக்கன்று, மரக்கறி விதைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டதோடு விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

அத்தோடு, தெரிவு செய்யப்பட்ட விவசாயிகள் 10 பேருக்கு விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு தலா 50ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசேலைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

விவசாயிகளுக்கான குறித்த உள்ளீடுகளை வடமாகாண விவசாய அமைச்சர் பா.ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,சட்டத்தரணி பிரிமூஸ் சிறாய்வா ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X