2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

வடமாகாண சபை உறுப்பினர் மீது தாக்குதல்

Niroshini   / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (18) இரவு, வடமாகாண சபை உறுப்பினர் இராமநாதர் இந்திரராஜா மீது,  இனந்தெரியாத நபர்கள் இரும்புக் கம்பியால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட வவுனியா விவசாய கல்லூரியைச் சேர்ந்த மாணவியின் மரண வீட்டுக்குச் சென்றுவிட்டு, இவரும் வடமாகாண சபை உறுப்பினரான பிச்சைமுத்து நடராஜாவும் மோட்டார் சைக்கிளில் வவுனியாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் இவர்களைப் பின்தொடர்ந்து வந்த இருவர், இவரை  இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளனர்.

இவர்களின் பின்னால் வந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர் எம்.தியாகராஜா ஆகியோர், இவரை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X