2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

வவுனியா மேல் நீதிமன்றத்தால் இருவருக்கு மரணதண்டனை

Gavitha   / 2015 நவம்பர் 13 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

கடந்த 2006ஆம் ஆண்டு, நபரொருவரை கொலை செய்த நபர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், குற்றவாளிகளாக இணங்காணப்பட்ட இருவருக்கு மரணதண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (13) உத்தரவிட்டுள்ளது.

செட்டிகுளம் 2 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த நவரத்தினராசா நவரஞ்சன் என்பரின் கொலை வழக்கிலேயே இந்த தீர்ப்பு வழக்கப்பட்டுள்ளது. கொலை தொடர்பில் சட்டமா அதிபரினால் குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேரில், கனகலிங்கம் செல்வரத்தினம் மற்றும் அழகன் சசிதரன் ஆகிய இருவருக்கே மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதே வழக்கில், குறித்த குற்றச்செயல்களை செய்வதற்காக சட்டவிரோதமான முறையில் செயற்பட்டமைக்காக, செட்டிகுளம் 2 ஆம் வட்டாரத்தை சேர்ந்தகனகலிங்கம் செல்வரத்தினம், அழகன் சசிதரன், தில்லையம்பலம் ஜெயராசா, தில்லையம்பலம் குலேந்திரராசா, தியாகராசா குமார், அந்தோனிப்பிள்ளை சுபாஸ்கரன் ஆகியோருக்கு, தலா 5 மாத கடூழிய சிறைத்தண்டனையும் 5,000 ரூபாய் தண்டமும் விதித்து நீதவான் தீர்பளித்துள்ளார்.

மேலும் நவரத்தினராசா மனோராஜ் என்பவருக்கு படுகாயங்களை ஏற்படுத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேரும் குற்றவாளியாக இனங்காணப்பட்டு, அவர்களுக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 10,000 ரூபாய் தண்டமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

அழகன் சசிதரன் ஏற்கெனவே வவுனியா மேல் நீதிமன்றத்தால் வேறு ஒரு கொலை குற்றச்சாட்டு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X