2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வவுனியாவில் 8 இடங்கள் டெங்கு அபாய வலயம்

Niroshini   / 2015 டிசெம்பர் 16 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியாவில் 8 இடங்கள் டெங்கு அபாய வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.வவுனியா மாவட்ட செயலகத்தில் வவுனியா அரசாங்க அதிபர் தலைமையில் இன்று(16) இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே இவ்இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டன.

இதன் நிமித்தம் கற்குழி, தேக்கவத்தை, தோணிக்கல், வவுனியா நகர், சுசைப்பிள்ளையார்குளம், குருமன்காடு, வைரவபுளியங்குளம், பூந்தோட்டம் ஆகிய இடங்களே டெங்கு அபாயமுள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் இவ் இடங்களில் விசேட குழுக்களின் மூலம் டெங்கு பரவும் இடங்கள் அடையளப்படுத்தப்படவுள்ளதாகவும் இக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரச திணைக்களங்களின் தலைவர்கள் மூலமாக அனைத்து அரச திணைக்களங்களில் இருந்தும் அரச உத்தியோகத்தர்களை குழுவாக நியமித்து வீடு வீடாக சென்று டெங்கொழிப்பு செயற்திட்டத்தில் பங்கேற்றகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் நாளை முதல் இப்பணியை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X