Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
George / 2016 ஜூன் 21 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
வவுனியா கோவில்குளம் பகுதியைச் சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் இன்று இரவு 7.15 மணியளவில் கடத்தப்பட்டுள்ளார்.
சண்முகம் செல்வராசா (வயது 55 ) என்ற வர்த்தகரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
வவுனியாவிலிருந்து தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இவர், தனது வீட்டு வாசலில் வைத்து கடத்தப்பட்டுள்ளார்.வாகனமொன்றில் வந்தவர்களால் இவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடத்தப்பட்ட வர்த்தகரின் குடும்பத்தார் கொழும்பில் வசித்து வருவதுடன், அவர் தனியாகவே வாழ்ந்து வந்துள்ளார்.
அருகிலிருந்தவர்கள் வழங்கிய தகவலையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago