2025 ஜூன் 01, ஞாயிற்றுக்கிழமை

விசேட அதிரடிப்படையினரிடம் பச்சிலைப்பள்ளி மக்கள் கோரிக்கை

Editorial   / 2018 ஓகஸ்ட் 19 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்

 

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுத்து நிறுத்த, விசேட அதிரடிப்படையினர் களத்தில் இறங்கவேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பளை - கிளாலி பகுயில் இடம்பெற்ற சட்டவிரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்தப் பொலிஸார் தவறிய நிலையில், விசேட அதிரடிப்படையினரே, தற்போது பெருமளவுக்குக் கட்டுப்படுத்தியிருகின்றனர் என, அம்மக்கள் குறிப்பிடுகின்றனர். எனவே, ஏனைய பிரதேசங்களில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுத்து நிறுத்த, விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சட்டவிரோத மணல் அகழ்வு விடயத்தில், பொலிஸாரின் நடவடிக்கையில் நம்பிக்கையிழந்த தாங்கள், விசேட அதிரடிப்படையினரின் உதவியை நாடுவதாகவும், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

பளையில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுத்து நிறுத்தாவிடின், குறுகிய காலத்தில் பளை முழுவதும் உவராக மாறிவிடுமெனவும், பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .