2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

விவசாய மருந்து கடையில் கொள்ளை

Niroshini   / 2021 ஜனவரி 10 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - மாங்குளம் நகர்பகுதி,  மல்லாவி வீதியில் அமைந்துள்ள விவசாய மருந்து கடை உடைத்து பெறுமதியான விவசாய மருந்துகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இச்சம்பவம், நேற்று (09)அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது, 18 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருள்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் மாங்குளம் நகர்பகுதியில், படையினரின் காவலரண் மற்றும் 500 மீற்றர் தூரத்தில் மாங்குளம் பொலிஸ் நிலையம் என்பன காணப்படும் நிலையில், கடந்த காலங்களில் கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .