2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

ஹரிஸ்ணவியின் படுகொலையை கண்டித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Gavitha   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட வவுனியா விபுலானந்த கல்லூரி மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலையை கண்டித்து, மன்னாரில் இன்று வியாழக்கிழமை (26) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்றும் இனிவரும் காலங்களில் இலங்கையின் பொலிஸ் துறையும் அதனுடன் இணைந்த ஏனைய சிவில் மற்றும் சமூக அமைப்புக்கள் இவ்வாறான சிறுவர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X