2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

இந்தியாவின் தாய்மார்களுக்கு பாரத ரத்னா சமர்ப்பணம்:சச்சின்

Kanagaraj   / 2014 பெப்ரவரி 04 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தான் பெற்ற பாரத ரத்னா விருதினை இந்தியாவின் அனைத்து தாய்மார்களுக்கும் சமர்ப்பிப்பதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு இன்று பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

இந்த விருதினை தனது தாயாருக்கும், இந்தியாவின் அனைத்து தாய்மார்களுக்கும் சமர்ப்பணம் செய்வதாக சச்சின் தெரிவித்தார்.

குடியரசுத் தலைவரிடம் விருது வாங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெற்றோரும், தன்னுடைய குழந்தைகளை வளர்ப்பதற்காக பெரும் தியாகம் செய்வதாக, முன்பே கூறியதை நினைவுகூர்வதாகவும், இந்திய தேசத்தில் பிறந்ததற்காக மிகவும் பெருமைப்படுவதாகவும், விருதினை தான் பெற வேண்டும் என விரும்பிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் சச்சின் தெரிவித்தார்.

இதே நிகழ்ச்சியில் சி.என்.ஆர்.ராவுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

பாரத ரத்னா விருது பெற்ற சி.என்.ஆர். ராவுக்கு பாராட்டுக்களை தெரிவித்த அவர், இந்திய இளைஞர்கள் அறிவியல் விஞ்ஞானிகளாவதற்கு முன்னோடியாக ராவ் இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X