A.P.Mathan / 2014 நவம்பர் 06 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் தலை சிறந்த கிரிக்கெட் வீரராக சேர் டொனால்ட் பிரட்மனுக்கு பின்னர் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர், தனது சுயசரிதைப் புத்தகத்தை நேற்று வெளியிட்டு இருந்தார். தான் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று ஒரு வருடத்தில் இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளார். நேற்று மும்பையில் அவரின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் என பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். "பிளேயிங் இட் மை வேய்" என பெயரிடப்பட்டு இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. என் பாதையில் இதை விளையாடுகிறேன்" என்ற பெயரிலேயே இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. முதற் பிரதியை சச்சின் தனது தாயாருக்கு வழங்கி வைத்தார். தனது தமையன் அஜித்துக்கும் இந்த புத்தகத்தை வழங்கிய சச்சின், தனது வாழ்கையில் அஜித் மற்றும் அஞ்சலி ஆகியோரும் முக்கிய பங்கு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். 6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago