2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

33 அடி உயரம்: 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் தாவரம்

Editorial   / 2025 ஜூலை 03 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகில் ஆயிரக்கணக்கான வகையான தாவரங்கள் உள்ளன. ஆனால். சில தாவரங்கள் அவற்றின் தனித்துவத்திற்கு பிரபலமானவை. அந்த வகையில், 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் ஒரு தாவரத்தை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பூமியின் ஏராளமான மர்மங்கள் உள்ளன. அவை நமக்கு தெரிய வரும்போது ​​மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். அதேபோல், மரங்களும் தாவரங்களும் மிக தனித்துவமானவை. இன்று நாம் பார்க்கப்போகும் ஒரு தாவரமும் மிகவும் வித்தியாசமானது. அதில் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கள் பூக்கும்.

100 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் ஒரு தாவரம் உள்ளதா என்று உங்களுக்கு தோன்றலாம். ஆம்... உண்மை தான். அந்த தாவரத்தின் பெயர் புயா ரைமண்டி (Puya Raimondi). இது 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் மிகவும் அரிதான மற்றும் மிகப்பெரிய தாவரமாகும். அதனால் தான், மக்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே இதைப் பார்க்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இந்த செடி 80 முதல் 100 ஆண்டுகள் பழமையான போது மட்டுமே பூக்கும். இது பொதுவாக கற்றாழையின் கலப்பு தாவரமாகும்

புயா ரைமோண்டி தென் அமெரிக்காவில் 12,000 அடி உயரத்தில் வளரும். அறிக்கைகளின்படி, இந்த செடி மோசமான மண்ணிலும், குளிர் மற்றும் வறண்ட காலநிலையிலும் வளரும் தன்மை கொண்டது. புயா ரைமண்டி உலகின் மிகப்பெரிய ப்ரோமிலியாட் ஆகும். இது உலகின் மிக உயரமான பூ ஸ்பைக்கைக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இது பூக்க எவ்வளவு நேரம் ஆகும் என்பது பற்றி இன்னும் தெளிவாக தெரியவில்லை.

புயா ரைமோண்டி 33 அடி உயரம் வரை வளருமாம். பூக்கள் பூக்கும் போதெல்லாம், அது மிகவும் அழகாக இருக்கும். இந்த செடி வெள்ளை பூக்களால் பூக்கும். மேலும், முழு செடியும் பூக்களால் மூடப்பட்டிருக்கும். இதில், பூக்கள் பூத்த பிறகு செடி இறந்துவிடும்.

எனவே, இந்த செடி அதன் தனித்துவம் காரணமாக விஞ்ஞானிகள் மற்றும் தாவர பிரியர்களுக்கு ஒரு கவர்ச்சியான விஷயமாகும். இதைப் பற்றி அறிந்து கொள்வது இயற்கையின் மர்மங்களைப் புரிந்துகொள்ள உதவுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .