2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

மனித உடல் சதை உண்ணும் ஒட்டுண்ணி

Editorial   / 2025 ஓகஸ்ட் 26 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனிதர்களின் சதையை உண்ணும் 'ஸ்க்ரூவோர்ம்' என்ற ஒட்டுண்ணி அமெரிக்காவில் ஒருவருக்கு தொற்றியுள்ளதை அந்நாட்டு சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

'ஸ்க்ரூவோர்ம்கள்' அல்லது சதை உண்ணும் திருகுப்புழுக்கள் என்பவை ஒருவித ஒட்டுண்ணி ஈக்கள். இதில் பெண் ஈக்கள் கால்நடைகள், காட்டு விலங்குகளில் ஏற்படும் காயங்களில் முட்டையிடுகின்றன.

முட்டைகள் பொரித்தவுடன், நுாற்றுக்கணக்கான திருகுப்புழு லார்வாக்கள் தங்கள் கூர்மையான வாய்களை பயன்படுத்தி, விலங்கின் காயங்களுக்குள்ளும் சென்று, உயிருள்ள சதையைத் துளையிட்டு உண்ணும்.

உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் பாதிக்கப்பட்ட கால் நடையோ, விலங்கோ உயிரிழக்க நேரிடும். ஆனால் இந்த சதை உண்ணும் ஒட்டுண்ணி மனிதர்களிடத்தில் காணப்படுவது அரிது.

இந்த நிலையில் முதல்முறையாக, அமெரிக்காவின் மத்திய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், நியூயார்க்கில் உள்ள ஒருவரிடம், இந்த ஒட்டுண்ணியைக் கண்டறிந்துள்ளது. அவர், எல் சால்வடாரில் இருந்து திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த, 1960களில் உள்நாட்டில் ஒழிக்கப்பட்ட இந்த ஒட்டுண்ணி, தற்போது மத்திய அமெரிக்காவிலிருந்து வடக்கே நகர்ந்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X