Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Janu / 2024 பெப்ரவரி 14 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிஓயா பிரதேசத்தில் வயல் காவலுக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் புதன்கிழமை (13) யானை தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார்.
வெலிஓயா- ஜனகபுரம் பகுதியை சேர்ந்த 50 வயதுடைய விவசாயி ஒருவரே இவ்வாறு யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த நபர் , கால் ஒன்று முறிந்த நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் காட்டுயானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செ.கீதாஞ்சன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
16 minute ago
50 minute ago
2 hours ago