2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

சிறுமி கொலை விவகாரம் ; சந்தேக நபருக்கு விளக்கமறியல்

Janu   / 2024 பெப்ரவரி 19 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில்  சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டு  சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட  சந்தேக  நபரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  மன்னார் நீதவான்  திங்கட்கிழமை (19)  உத்தரவிட்டுள்ளார் .

குறித்த பிரதேசத்தில்  10 வயதுடைய  சிறுமி ஒருவர் கடந்த 16 ஆம் திகதி காலை சடலமாக மீட்கப்பட்ட  சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அதே கிராமத்தில் உள்ள தென்னை தோட்டத்தில் வேலை செய்யும் திருகோணமலை குச்சவெளி பகுதியை சேர்ந்த 52 வயதுடைய சந்தேக நபரை   நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய 48 மணி நேரம்  பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது .

இந் நிலையில் குறித்த சந்தேக நபரை  திங்கட்கிழமை (19)  மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய  போது  மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகள்   உயிரிழந்த சிறுமி சார்பில் மன்றில் முன்னிலையாகியுள்ளனர் , இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார் .

லெம்பேட்   ரோஸரியன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X