2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நிர்மலநாதன் எம்.பி போராட்டத்துக்குஅழைப்பு

Freelancer   / 2021 ஒக்டோபர் 24 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட் 

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 174 கமக்கார அமைப்புகளை உள்ளடக்கிய மன்னார் மாவட்ட விவசாய சம்மேளனத்தினர், நாளை திங்கட்கிழமை (25) முற்பகல் 10 மணிக்கு முன்னெடுக்கும் பேராட்டத்தில் அனைத்து விவசாயிகளும்  கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.

குறித்த  போராட்டமானது மன்னார் - உயிலங்குளம் கமநல சேவை திணைக்களத்தின் முன்பாக இடம் பெறவுள்ளது.

'தற்போது காலபோக நெற்செய்கை ஆரம்பித்துள்ளது. அரசாங்கத்தின் 
திட்டமிடப்படாத நடவடிக்கை காரணமாக இந்த நாட்டில் பாரிய உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த அரசாங்கம் உடனடியாக விவசாயிகளுக்கு உரத்தை வழங்குமாறு கோரி நடைபெற உள்ள இந்த போராட்டத்துக்கு அனைத்து விவசாயிகளையும் கலந்து கொண்டு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .