2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புத்தூர் சந்தியில் இளைஞன் மீது வாள்வெட்டு

Niroshini   / 2021 ஜூலை 01 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

மீசாலை - புத்துார் சந்தியில், நேற்று (30) காலை 11.30 மணியளவில், வீதியால் நடந்து சென்ற இளைஞன் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

மந்துவில் பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞன், இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.
 
சம்பவத்தில் காயமடைந்த இளைஞன், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பஸ்ஸில் பயணித்த குறித்த இளைஞன், மீசாலை - புத்துார் சந்தியில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர், அவ்விளைஞனை வழிமறித்து, தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

யாழில், அண்மைக்காலமாக வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், வாள்வெட்டு சந்தேக நபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .