2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை

பேருந்து விபத்தில் மாணவன் படுகாயம்

Janu   / 2024 ஏப்ரல் 08 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா , மகிழங்குளம் பகுதியில் பாடசாலைக்கு சென்ற மாணவன்  ஒருவன் பேருந்தில்  மோதி  படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் திங்கட்கிழமை  (08)  இடம்பெற்றுள்ளது .

பத்தினியார் ,மகிழங்குளம் நோக்கி வந்த பேருந்து,  அதே திசையில் புதுக்குளம் பாடசாலைக்கு துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவன் மீது  மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக  தெரியவந்துள்ளது .

மேலும் இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டுவருவதாக  தெரியவந்துள்ளது .

க. அகரன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X