2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மண்டைதீவில் 3 கைக்குண்டுகள் மீட்பு

Editorial   / 2021 ஜூலை 07 , பி.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 டி.விஜித்தா


ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டைதீவு பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து மூன்று கைக்குண்டுகள் இன்றுக்காலை கண்டறியப்பட்டுள்ளன.

மண்டைதீவு பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு பின்பக்கமாக உள்ள காணியில் விறகு பொறுக்குவதற்காக சென்ற கிராமவாசிகள், கைக்​குண்டொன்றை கண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் நடத்திய தேடுதலில் மேலும் இரண்டு கைக்குண்டுகள் அவ்விடத்திலேயே மீட்கப்பட்டுள்ளன. அந்த மூன்று கைக்குண்டுகளையும் செயலிழக்கும் படையினருக்கு ​கையளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .