Editorial / 2021 மே 16 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் இரட்டை குழந்தைகளை பிரசவித்துள்ளார். தாயும் சேய்களும் நலமாக வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி,கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரட்டை குழந்தைகளை பிரசவித்திருந்தார்.
வைத்தியர்களின் விசேட கண்காணிப்புடன் தாய்க்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இரண்டு குழந்தைகளுக்கும் தொற்று ஏற்பட்டு இருக்கவில்லை.
தொற்றில் இருந்து, தாய் பூரணமாக குணமடைந்தார். அதனையடுத்து, மூவரும், நேற்றையதினம் வீடு திரும்பிவிட்டனர் என வைத்தியசாலை நிர்வாக அறிவித்துள்ளது.
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
7 hours ago