Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மே 02, வியாழக்கிழமை
Niroshini / 2021 ஓகஸ்ட் 31 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ள கொரோனோ சிகிச்சை விடுதிகள் நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, தெல்லிப்பழை, பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி வைத்தியசாலைகள் ஆகியவற்றில், கோவிட்-19 சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்பட்டு, கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருpன்றன.
இந்த நிலையில், நேற்று (30) நிலைவரம் படி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், 129 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அத்துடன், அங்கு அமைக்கப்பட்டுள்ள 2 அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில், 10 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா மரணங்களும் அதிகரித்துள்ள நிலையில், தினமும் 5 சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
மேலும், அந்தச் சடலங்கள், கோம்பயன் மணல் மயானத்தில் சுகாதார விதிமுறைகளின் கீழ் எரியூட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
01 May 2024
01 May 2024