2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

வாகன விபத்தில் அருட்தந்தையொருவர் பலி

Janu   / 2024 மார்ச் 05 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் - அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  அடம்பன் நாற்சந்தியில்   இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்த  சம்பவம்  திங்கட்கிழமை (4)  பதிவாகியுள்ளது .

மன்னார் மறை மாவட்டம் , லேசியன் சபையைச் சேர்ந்த 34 வயதுடைய அருட்தந்தை மரிசால் டிலான் என்பவரே  இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

வடக்கு கிழக்கு தமிழ் மறைமாவட்ட குருக்களுக்கான தவக்கால தியானம்   மன்னார் மடு தேவாலயத்தில் நடைபெற்றுள்ளதுடன்  அதில்  கலந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி  வருகையில் எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதியே  இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது .

இதன் போது படுகாயமடைந்த அருட்தந்தையை  மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் குறித்த  விபத்து தொடர்பான விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ்.றொசேரியன் லெம்பேட் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .