2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கருத்தரங்கும் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வும்

Niroshini   / 2015 நவம்பர் 23 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

தயா சரண அறக்கட்டளை உதவியுடன் அம்பாறை மாவட்டத்தில் கல்வி மற்றும் சுகாதார உதவி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் நேற்று(22) தெகியத்தகண்டி, அம்பாறை பிரதேசத்தில் இவ்வருடம் க.பொ.த சாதாரண பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான கருத்தரங்குகள் நடைபெற்றன.

கடந்த கால பரீட்சை முடிவுகளின் படி குறைந்த புள்ளிகளை பெற்ற கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யபட்டு நடைபெற்றன.

இதேவேளை, உகனை பிரதேசத்தில் பார்வை குறைபாடு உடையவர்களுக்கு மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .