2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வெள்ள அனர்த்தம்; முகாம்களில் தஞ்சமடைந்துள்ளர்கள் அத்தியவசிய பொருட்களின்றி அவதி

Super User   / 2011 ஜனவரி 12 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம்.றம்ஸான்)

வெள்ள அனர்த்தம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் முகாம்களில் தஞ்சமடைந்துள்ள மக்கள் அத்தியவசிய பொருட்களின்றி அவதிப்படுகின்றனர்.

முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அரசாங்கத்தினால் சமைத்த உணவுகள்  வினியோகிக்கப்பட்டு வருகின்ற போதும் படுக்கை விரிப்புக்கள், போர்வைகள், சிறுவர்களுக்கான பால்மா உணவுகள் போன்றவற்றை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் முகாம்களில் சிரமப்படுகின்றனர்.

எந்தவொரு அரச சார்பற்ற அமைப்புக்களும் இந்த பிரதேசங்களில் இன்னும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எந்தவித வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை.

இதேவேளை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்கும் திட்டத்தில் கல்முனை பொலிஸ் நிலையத்தால் சமைத்த உணவு வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .