2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஒன்றுகூடலும் நடமாடும்சேவையும்

Kogilavani   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் 'நிறைவான இல்லம் வளமான தாயகம' எனும் தொனிப்பொருளில் கல்முனை பிரதேச செயலகப் பிரிவு கிராமிய மக்களின் ஒன்று கூடலும், நடமாடும் சேவையும் புதன்கிழமை (09) கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்திலும் வியாழக்கிழமை (10) கல்முனை அல் மிஸ்பஹ் மகா வித்தியாலயத்திலும் நடைபெறவுள்ளது.

திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கல்முனை அபிவிருத்தி குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்  தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் கல்முனை 3, கல்முனைக் குடி-1 தெடக்கம் 8 வரையான கிராம சேவகர் பிரிவுகளுக்கு புதன்கிழமையும், கல்முனைக் குடி -9 தொடக்கம் 14 வரையான கிராம சேவகர் பிரிவுகளுக்கு வியாழக்கிழமையும் இடம்பெறும்.

இந்நிகழ்வில் வழமையான செற்பாடுகளுடன் விசேடமாக கிராமத்தின் அபிவிருத்தி பற்றி கலந்தாலோசிக்கப்படவுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .