Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை
Editorial / 2020 மார்ச் 04 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் கடந்த மூன்று நாட்களில் COVID-19-ஆல் தொற்றுக்குள்ளான புதிதாக 28 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று தெரிவித்துள்ளார்.
டெல்லிக்கு கடந்த மாதம் சென்ற 23 இத்தாலிய சுற்றுலாப்பயணிகளில் 15 பேரும், அவர்களுடன் பயணித்த ஒரு இந்தியரும் COVID-19 தொற்றுக்குள்ளானதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையிலேயே COVID-19-ஆல் இந்தியாவில் பீடிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது இவ்வாறாக உயர்ந்துள்ளது.
இதேவேளை, குறித்த 28 பேரில் ஆறு நோயாளர்கள், கடந்த திங்கட்கிழமை COVID-19 தொற்றுக்குளாகியிருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்ட 45 வயதான டெல்லி நபர் குடும்ப உறுப்பினர்கள் என ஹர்ஷ் வர்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த டெல்லி நபர் அண்மையில் இத்தாலிக்குச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவுக்கு அடுத்தாக இத்தாலியிலேயே COVID-19 வேகமாகப் பரவி வருகிறது.
இதுதவிர, சர்வதேச விமானங்களிலிருந்து வரும் அனைத்து பயணிகளும் சோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாக ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்தியாவில் COVID-19 தொற்றுக்குள்ளான கேரளாவைச் சேர்ந்த முதல் மூன்று பேரும் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
34 minute ago
7 hours ago
26 Apr 2024