2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (14.06.2011)

A.P.Mathan   / 2011 ஜூன் 13 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பலன்கள் (14.06.2011)

இன்று கர வருடம் வைகாசி மாதம் 31ஆம் நாள் (14.06.2011) செவ்வாய்க்கிழமை. சித்த யோகமும் சதுர்த்தசி திதியும் அனுஷம் நட்சத்திரம் காலை 02.35 மணிவரை, பின்பு கேட்டை.

இராகு காலம் : காலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் :  காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை, இரவு 1.30 மணி முதல் 3.00 மணிவரை.
நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் 11.30 வரை, மாலை 4.30 மணி முதல் 5.30 மணிவரை.



மேடம்
இசையில் அதிக ஆர்வம் காட்டுதல்;, தொழில் தொடர்பான இடமாற்றங்கள் ஏற்படும், சுவையான உணவுகள் கிடைக்கும்.
அஸ்வினி: சுபம்
பரணி: மனஅமைதி
கிருத்திகை 1ஆம் பாதம்: இன்பம்


இடபம்
வியாபாரத்தில் நல்ல வாய்ப்புக்கள் பின்தள்ளப்படுதல், திருடர்களினால் பயம் ஏற்படும், புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.
கிருத்திகை 2, 3, 4: கவனம்
ரோகிணி: மனசங்கடம்
மிருகசீரிடம் 1, 2: போட்டி


மிதுனம்
அரசாங்க உதவிகள் கிடைக்ககூடும், குடும்பத்தில் சொந்தபந்தங்களின் வருகையினால் குதூகலம், தனவரவு ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: அதிர்ஷ்டம்
திருவாதிரை: ஆதாயம்
புனர்பூசம்: உற்சாகம்


கடகம்
புதுமையான பொருள் காணக்கிடைக்கும், பெண்களுடன் நாவடக்கத்துடன் செயல்படவும், பிறரின் பிரச்சினைகளை பேசுவதால் பகை.
புனர்பூசம்: குழப்பம்
பூசம்: பொறுமை
ஆயில்யம்: ஆச்சரியம்


சிம்மம்
புதிய தொடர்புகளை பயன்டுத்தி ஆதாயம் அடைதல், மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், உடல் சோர்வுகள் வந்து நீங்கும்.
மகம்: அனுகூலம்
பூரம்: சுகயீனம்
உத்திரம் 1ஆம் பாதம்: ஆசீர்வாதம்


கன்னி
பெரியார்களின் அறிவுரைகள் மனஅமைதி தரும், பணவரவுகள் ஏற்படும், பகைவர்களுடன் அதிக பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும்.
உத்திரம் 2, 3, 4: நாவடக்கம்
அஸ்தம்: லாபம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: நம்பிக்கை


துலாம்
வெண்மையான ஆடைகளை அணியலாம், நிம்மதியான உறக்கம் கிடைக்கும், உற்சாகத்துடன் நன்மையான காரியங்களில் ஈடுபடலாம்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: நன்மை
சுவாதி: மனநிறைவு
விசாகம் 1, 2, 3: சந்தோஷம்


விருட்சிகம்
காணாமல்போன பொருள் கிடைக்கக்கூடும், சரும நோய்கள் வந்து நீங்கும், இறை வழிபாடுகள் பிரார்த்தனைகள் மனஅமைதி தரும்.
விசாகம் 4: தேகசுகம்
அனுசம்: தியானம்
கேட்டை: சுபம்


தனுசு
சுற்றுலா பயணங்களில் மகிழ்ச்சியுடன் ஈடுபடல், பெண்களின் உதவிகள் கிடைக்கும், புதிய வேலைப் பணிகளை மேற்கொள்ளுதல்.
மூலம்: முன்னேற்றம்
பூராடம்: அக்கறை
உத்திராடம் 1ஆம் பாதம்: நிம்மதி


மகரம்
மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கும், புதிய முயற்சிகளினால் முன்னேற்றம், மனபயங்கள் ஏற்பட்டு நீங்கும்.
உத்திராடம் 2, 3, 4: உதவி
திருவோணம்: உழைப்பு
அவிட்டம் 1, 2: கலக்கம்


கும்பம்
குடும்பத்தில் உற்றார் உறவினர்களின் வருகை, அரசாங்க ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும், மனதில் உற்சாகம் ஏற்படும்.
அவிட்டம் 3, 4: இன்பம்
சதயம்: வாய்ப்பு
பூரட்டாதி 1, 2, 3: அன்யோன்யம்


மீனம்
பிறரின் பிரச்சினைகளுக்காக வாதிடுவதை தவிர்க்கவும், உடலால் சில சிரமங்களை எதிர்நோக்க நேரிடும், மனஉளைச்சல்கள் ஏற்படும்.
பூரட்டாதி 4: சஞ்சலம்
உத்திரட்டாதி: நலன் பாதிப்பு
ரேவதி: துன்பம்
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .