2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதல்: 37 பொதுமக்கள் பலி; 175 பேர் காயம்

Super User   / 2010 ஜூலை 02 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 37 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன், இந்த தற்கொலைத் தாக்குதலில் சுமார் 175 பேர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியான லாகூரிலுள்ள மத வழிபாட்டுத் தலமொன்றிலேயே நேற்று மாலை இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

குறித்த மத வழிபாட்டுத் தலத்திற்கு ஆயிரக்கணக்கானோர் மத வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக சென்றிருந்த வேளையில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி மத வழிபாட்டுத் தலத்திற்கு சுனி மற்றும் ஷியா ஆகிய இருவின  முஸ்லிம்களும் சென்று வழிபாடுகளில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
இந்தத் தாக்குதலில் இரு தற்கொலை தாரிகள் ஈடுபட்டிருக்கலாம் என்பதுடன், இதன்போது மூன்று வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும் அந்த நாட்டுப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .