2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கூடைப்பந்தாட்ட போட்டியில் யாழ். இந்துக் கல்லூரி, யாழ்.திருக்குடும்ப கன்னியர்மடம் சம்பியன்

Kogilavani   / 2012 நவம்பர் 10 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கு.சுரேன்)

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, யாழ்.மாவட்டப் பாடசாலைகளின் 19 வயதுப் பிரிவு அணிகளுக்கிடையில் நடத்திய டபிள்யு.ஆர்.கொல்மஸ் ஞாபகார்த்த கூடைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதி போட்டியில் யாழ். இந்துக் கல்லூரி, யாழ்.திருக்குடும்ப கன்னியர்மடம் ஆகிய அணிகள் சம்பியன் ஆகின.

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பெண்கள் மோதிக்கொண்டனர்.

பெண்களுக்கான இறுதிப் போட்டியில் யாழ்.திருக்குடும்பக் கன்னியர்மடமும், மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியும் மோதின.

இப்போட்டியின் முதல் இரண்டு சுற்றுக்களையும் இராமநாதன் மகளிர் அணி கைப்பற்றியது.

இறுதி சுற்றில்  யாழ்.திருக்குடும்பக் கன்னியர்மடம் 33:23 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்று சம்பியனாகியது.

மூன்றாமிடத்திற்கான ஆட்டத்தில் உடுவில் மகளிர் கல்லூரி 20:10 என்ற புள்ளி அடிப்படையில் பண்டத்தரிப்பு மகளிர் உயர்தர பாடசாலையை வென்றது.

பெண்களுக்கான பிரிவில், இறுதிப்போட்டியின் நாயகியாக யாழ்.திருக்குடும்பக் கன்னியர்மடத்தைச் சேர்ந்த வெனிற்றாவும், சுற்றுப்போட்டியின் தொடர் நாயகியாக மருதனார் இராமநாதன் கல்லூரியைச் சேர்ந்த குணதீபாவும் தெரிவு செய்யப்பட்டனர்.

ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியும் மோதின.

இப்போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி 32:26 என்ற புள்ளி அடிப்படையில் மத்திய கல்லூரியினை வென்று சம்பியனாகியது.
மூன்றாமிடத்திற்கான ஆட்டத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணி 28:21 என்ற புள்ளி அடிப்படையில் சென்.ஜோன்ஸ் கல்லூரியினை வீழ்த்தியது.

ஆண்களுக்கான பிரிவில் இறுதிப்போட்டியின் நாயகனாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அனுஷனும்  சுற்றுப்போட்டியின் தொடர் நாயகனாக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் தயாவும் தெரிவு செய்யப்பட்டனர்.

வெற்றி அணிகளுக்கும் வீரர்களுக்குமான வெற்றி கிண்ணங்களை, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அதிபர் நோயல் விமலேந்திரன் வழங்கினார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .