2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய, வடக்கு, வடமேல், மற்றும் தென் மாகாணங்களிலும், பதுளை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் இன்றைய தினம் (18), மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் மத்திய, மேல், வடமேல் ஆகிய மாகாணங்களிலும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று பலத்த மழைப் பெய்யக்கூடிய சாத்திய நிலைக் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளதோடு, தங்காலையிலிருந்து பொத்துவில் வரையான கடற்கரையோர பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50 தொடக்கம் 60 வரை வீசக்கூடுமென்பதால் ​பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .