2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

காணிகளை சுவீகரிக்க அங்கிகாரம்

Editorial   / 2017 ஜூலை 19 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாலாவ நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்காக காணிகளை சுவீகரிப்பதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.  

பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.  

சாலாவ நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்காக, விசேட குழுவின் மூலம் சிபாரிசு செய்யப்பட்டுள்ள விடயங்களை துரித கதியில் மேற்கொள்வதற்கு, இலங்கை இராணுவத்தினரின் இணக்கத்துடன் சாலாவ இராணு முகாம் பூமியில் அமைந்துள்ள 04 ஏக்கர், 02 ரூட், 24.40 பேர்ச்சஸ் காணியை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு இலவச கொடுப்பனவு முறையில் பெற்றுக் கொள்வது தொடர்பில், அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .