2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கந்தளாயில் போலி ஆவணங்களுடன் தங்கியிருந்த இந்திய பிரஜை கைது

Super User   / 2010 மார்ச் 25 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தளாய்ப் பிரதேசத்தில் போலி ஆவணங்களுடன் தங்கியிருந்த இந்தியப் பிரஜை ஒருவர் பொலிஸ் குற்றப்புலனாய்வுப்  பிரினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளுக்காக அடுத்த மாதம் வரை இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சென்னையை சேர்ந்த இந்த நபர் கடந்த 2005ஆம் ஆண்டு 30 நாள்கள் மாத்திரமே வீசா அனுமதியை பெற்றிருந்தவர். இதன் பின்னர் அவர் போலி ஆவணங்களைக் காட்டி தன்னை அடையாளப்படுத்தி வந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .