2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சபை விவாதத்தில் ஒழுக்கமான வார்த்தை பிரயோகம் மேற்கொள்ள சமல் அறிவுறை

Super User   / 2010 ஜூலை 02 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சபை விவாதங்களில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஏனைய உறுப்பினர்களுக்கு சேறு பூசாத வகையில் ஒழுக்கமான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்ள வேண்டும் என்று சபாநாயகர் சமல் ராஜபக்ஸ இன்று அறிவுறுத்தல் வழங்கினார்.

சபையின் செயற்பாடுகளைக் கண்டிகளிப்பதற்காக பாடசாலை மாணவர்கள் வருகை தருவதால், அவர்கள் முன்னிலையில் தத்தமது மரியாதைகளைக் காப்பாற்றிக்கொள்ளுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சாபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

2010ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையிலேயே குறித்த அறிவுறுத்தலை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஸ வழங்கினார்.



You May Also Like

  Comments - 0

  • xlntgson Friday, 02 July 2010 09:26 PM

    பொலீஸ் & பாதுகாப்பு படையினருக்கும் இந்த அறிவுறுத்தல் விடப்படவேண்டும். காதுக்குள் பேசவேண்டிய விடயங்களை ஒலிவாங்கியில் உரத்துக்கூறும் அரசியல் வாதிகள் போல் பகிரங்க இடங்களில் காவற்துறையினரதும் சில நேரங்களில் படைகளை சேர்ந்தவர்களினதும் ஓங்கி ஒலிக்கும் குரல் அரசியல்வாதிகள் எழுப்பும் ஒலிபெருக்கியை மிஞ்சிவிடும் குரல் பெரு அளவில். தூசனம் சந்தனம் இவர்களுக்கு நறுமணம். சூழவாழும் பிள்ளைகளுக்கு இலவச பாலியற்கல்வி? இதற்கு பொறுப்பு பாதுகாப்பு துறையா, பொலீஸ் மா அதிபரா? கலாசார அமைச்சா? தகவல் ஒலிபரப்பா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .