2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ட்ரக்டர் மோதி மாணவன் பலி

George   / 2016 மார்ச் 29 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெனியாய, ஹிதகரலதெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார்.

ட்ரக்டர் வாகனம் பின்புறமாக செலுத்தப்பட்ட போது குறித்த மாணவன் இதில் மோதுண்டு மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த நிலையில் தெனியாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்பு மாணவன் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொட்டபொலப் பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதான மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ட்ரக்டர் வாகனத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .