2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நுரைச்சோலை அனல் மின்நிலைய ஊழியர் மூவர் உட்பட 9 பேர் பொலிஸாரினால் கைது

Super User   / 2010 ஜூன் 24 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மூவர் உட்பட 9 சந்தேக நபர்கள் புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனல் மின்நிலையத்திலிருந்து திருடப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 2 மில்லியன் பெறுமதியான செப்புக் கம்பிகளை வாகனத்தில் ஏற்றிச் செல்ல முற்பட்ட வேளையிலேயே, இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 9 பேரும் நேற்று புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்தனர்.  இந்நிலையில், இவர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் புத்தளம் நீதிமன்றம்  உத்தரவிட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .