2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

புதிய இராணுவ பேச்சாளராக பிரிகேடியர் உபய மெதவல நியமனம்

Super User   / 2010 ஜூன் 29 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் உபய மெதவல நியமிக்கப்பட்டுள்ளார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய இந்த நியமனத்தை வழங்கியிருப்பதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்தது.

இராணுவப் பேச்சாளராக இருந்த  மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க, இராணுவத்தின் பிரதான தொலைத்தொடர்பு அதிகாரியாகவும் சமிக்ஞை அதிகாரியாகவும் இராணுவ மருத்துவ பிரிவின் பொறுப்பாளராகவும் தொடர்ந்து சேவையாற்றுவார்.

அத்துடன், இவர் இராணுவத்தின் அபிவிருத்தி மற்றும் ஆய்வுக்கான மத்திய நிலையத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .