2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'மஹிந்தவைப் பொறுக்காது கல்லும் வெடித்தது'

Kanagaraj   / 2016 மார்ச் 24 , பி.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

'மஹிந்த ராஜபக்ஷ, குருநாகல் மாவட்டத்துக்குச் சென்றதைப் பொறுத்துக்கொள்ளாது, குருநாகலில் உள்ள யானைக்கல்லும் வெடித்து விட்டது' என்று இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (24) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தின் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அங்கு தொடர்ந்து உரையாற்றிய  அவர்,

'நாட்டையும் பொருளாதாரத்தையும்  சீர்குலைத்த மஹிந்த ராஜபக்ஷவை மக்கள் வெறுத்துவிட்டனர். எனினும், அவர் குருநாகலுக்குச் சென்றார். அதனைப் பொறுத்துக் கொள்ளாது, அங்குள்ள யானைக்கல்லும் வெடித்துவிட்டது. எனினும், கடந்த 17ஆம் திகதி ஹைட்பார்க்கில் நின்றுகொண்டு, நாட்டைத்தா, நாட்டைத்தா என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு மன்றாடினார். அதனை பொறுத்துக் கொள்ளாது மற்றைய கல்லும் வெடித்து விட்டது' என்றார்.

இதன்போது அவையில் அருந்த இணைந்த எதிரணியினர், '17க்கு அச்சமடைந்து விட்டீர்களா? அச்சமடைந்துவிட்டீர்களா?' என்று கோஷமிட்டனர்.

இதற்குப் பதிலளித்த இராஜாங்க அமைச்சர் 'ஆம், ஆம், அன்று மது அருந்திவிட்டு வீதிகளில் புரண்டு புரண்டு ஆட்கள் சென்றதை நாம் கண்டோம். அதன் சாபக்கேடே, நாட்டில் தற்போது வரட்சி நிலவுகின்றது' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .