2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

புனர்வாழ்வளிக்கப்பட்ட ஆயிரம் பேர் பெற்றோரிடம் ஒப்படைப்பு

Super User   / 2010 மே 18 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு தரப்பினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட ஆயிரம் இளைஞர், யுவதிகள் இன்று அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

யுத்தம் நிறைவுக்கு வந்த ஓராண்டினை முன்னிட்டு யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் வட மாகாண ஆளுநர் தலைமையில் இந்த வைபவம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்ட அரச அதிபர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவர்களும் அதில் கலந்துகொண்டனர்.

இவ்வாறு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களில் 198 சிறுவர்களும் அடங்குகின்றனர்.



 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .