2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விபத்தில் அறுவர் பலி

Editorial   / 2020 மார்ச் 09 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

லுணுகம்வேர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 22ஆவது மைல் கல்லுக்கு அருகில் இன்றுகாலை இடம்பெற்ற விபத்தில் அறுவர் பலியாகியுள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென லுணுகம்வேர பொலிஸார் தெரிவித்தனர்.

காலியை சேர்ந்தவர்களே இவ்வாறு பலியாகியுள்ளனர்.

மத்தலையிலிருந்து வெல்லவாய மாத்தறை வீதியில் பயணித்த வானொன்று வீதியோரத்திலிருந்த மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அந்த வானில் சாரதி உட்பட 9 பேர் பயணித்துள்ளனர்.

காயமடைந்த சாரதியும் ஏனையோரும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .