2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

13 ஆம் திகதி நள்ளிரவுடன் பிரசார நடவடிக்கை நிறைவு

Editorial   / 2019 நவம்பர் 10 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் 13 ஆம் திகதி புதன்கிழமை நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவு பெறுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

13 ஆம் திகதிக்கு பின்னரும் விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டால் சட்ட ஆலோசனைக்கு அமைய அதற்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

இறுதி பிரசாரக் கூட்டங்களின் செய்திகள் எதிர்வரும் வியாழக்கிழமை பத்திரிகைகளிலும், இலத்திரனியல் ஊடகங்களிலும் ஒரு செய்தியை மாத்திரமே உள்ளடக்க முடியும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.

இறுதி பிரசாரக் கூட்டங்களின் செய்திகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் கருத்து தெரிவிக்கையில் எதிர்வரும் வியாழக்கிழமை பத்திரிகைகளிலும், இலத்திரனியல் ஊடகங்களிலும் அது தொடர்பான செய்திகளில் ஒரு செய்தியை மாத்திரமே உள்ளடக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .