2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வட மாகாண அரச ஊழியர்கள் இலகு கடனில் மோட்டார்சைக்கிள் கொள்வனவு செய்ய வாய்ப்பு

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 16 , மு.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சரண்யா)

வடமாகாணத்துக்குட்பட்ட திணைக்களங்களில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு இலகு கடனடிப்படையில் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் வடமாகாண பிரதம செயலாளரினால் கோரப்பட்டுள்ளன.

வட மாகணத்திலுள்ள அரச திணைக்களங்களில் வெளிக்கள உத்தியோகத்தர் பதவி நிலையில் உள்ளோர் மற்றும் அரச திணைக்களங்கள் மூலமோ தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமோ மோட்டார் சைக்கிளை ஏற்கனவே பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவர்கள் தவிர்ந்த ஏனையோர், இலகு கடன் அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களைப் பெற விண்ணப்பிக்க முடியும் என்று மெலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .